இந்தியர்களின் மரபணு (டிஎன்ஏ) குறித்து, பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சாமி சர்ச்சைக்குரிய விதத்தில் பேசியுள்ளார்.
பாஜக மூத்த தலைவரான சுப்ரமணியன் சாமி, அவ்வபோது சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறுவதை வழக்கமாக கொண்டவர். தற்போது அவர், தமது வழக்கமான பாணியில் இந்தியர்களின் மரபணு (டிஎன்ஏ) குறித்து, சர்ச்சைக்குரிய விதத்தில் பேசியுள்ளார்.
இதுதொடர்பாக அவர், மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மேலும் பேசியது:
மரபணு தொடர்பாக, வரலாற்றில் ஆங்கிலேயர்கள் கூறியுள்ள தகவல்கள் தவறானது என்பது தற்போது தெரிய வந்துள்ளது. அதாவது, மரபணு குறித்து மேற்கொள்ளப்பட்டுள்ள நவீன விஞ்ஞான ஆய்வில், இந்தியர்கள் அனைவரின் டிஎன்ஏவும் ஒன்று தான் என தெரிய வந்துள்ளது.