புளியந்தோப்பில் 7 நாட்களாக நடந்த முஸ்லிம்கள் போராட்டம் வாபஸ் போலீசாரின் வேண்டுகோளை ஏற்று கலைந்து சென்றனர்

" alt="" aria-hidden="true" />

 

திரு.வி.க. நகர், 

 

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி சென்னை வண்ணாரப்பேட்டையை தொடர்ந்து புளியந்தோப்பு டிகாஸ்டர் சாலையிலும் திரளான முஸ்லிம்கள் கடந்த 22-ந்தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். நேற்று 7-வது நாளாக அவர்களின் போராட்டம் தொடர்ந்தது.


 


 

இதையடுத்து இணை கமிஷனர் விஜயகுமாரி, துணை கமிஷனர் ராஜேஷ்கண்ணா, உதவி கமிஷனர்கள் ஜெய்சிங் மற்றும் முத்துக்குமார், இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். குறுகலான சாலையில் போராட்டம் நடத்துவதால் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாகவும் பொதுமக்கள் நலன் கருதி போராட்டத்தை கைவிடுமாறும் போலீசார் கேட்டுக் கொண்டனர்.

 

நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பிறகு போலீசாரின் வேண்டுகோளை ஏற்று 7 நாட்களாக நடைபெற்ற போராட்டத்தை வாபஸ் பெற்றுக்கொண்ட போராட்டக்காரர்கள், அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் கடந்த 7 நாட்களாக பரபரப்பாக காணப்பட்ட புளியந்தோப்பு டிகாஸ்டர் சாலை நேற்று மாலை முதல் இயல்பு நிலைக்கு திரும்பியது.


Popular posts
நியாயவிலை கடை ஊழியர்களின் அடாவடி பொதுமக்கள் வேதனை
Image
பெரியகுளம் தேவதானப்பட்டி அருள்மிகு ஸ்ரீ மூங்கிலணை காமாட்சியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயமாகும்.
Image
திருவள்ளூர் மாவட்டம் கீழச்சேரி கிராமம் கோவிந்தம்மேடு பகுதியில் செயல்படும் முதியோர் இல்லத்தில்
Image
நடிகர் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் தூய்மைப் பணியாளர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
Image
புதுவை மாநிலம், வில்லியனூர் பகுதி சுல்தான்பேட்டையில் அமைந்துள்ள ஜம் ஜம் பழமுதிர் நிலையத்தில் மக்கள் கூட்டம் வழிந்தது
Image